தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

41 பேர் பலியாக காரணமான தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல்

மதுரை: மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளை விடுமுறை கால நீதிமன்ற அலுவலருக்கு அனுப்பியுள்ள இ-மெயில் மனு: கடந்த 27ம் தேதி கரூரில் நடிகர் விஜய்யின் பிரசாரம் நடந்தது. சுமார் 10 ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்பர் எனக்கூறி அனுமதி பெற்றுள்ள நிலையில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் நெரிசலான இடத்தில் கூடியிருந்தனர். அலட்சியம், சட்டப்பூர்வ அனுமதிகளை மீறியதன் விளைவாக, சிறுவர்கள், பெண்கள் உள்பட 41 பேர் உயிர் இழந்துள்ளனர்.

Advertisement

ஒரு வழக்கில், சிறுவர்களை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட்ட மும்பை நீதிமன்றம், இது தொடர்பாக கடுமையான வழிகாட்டுதல்களை வகுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இருந்தபோதிலும் நடிகர் விஜய்யின் கரூர் கூட்டத்தில் சிறுவர்கள், பெண்கள் பங்கேற்பதை தடுக்க தவறிவிட்டனர். இதன் விளைவாகத்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, 41 பேர் பலியாக காரணமான தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்து, பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு ஐகோர்ட் கிளை விடுமுறைகால நீதிமன்றத்திற்கான பதிவுத்துறையின் பரிசீலனைக்கு பிறகு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது.

Advertisement