தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

9 ஆமைகளை எரித்து கொன்ற 2 பேர் அதிரடி கைது: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

நாமக்கல்: நாமக்கல் அருகே காவிரி கரையோரத்தில் 9 ஆமைகளை பிடித்து, உயிருடன் எரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அஜித் (26), குமார் (25). நண்பர்களான இருவரும், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தேங்காய் குடோனில் வேலை பார்த்து வருகின்றனர்.

Advertisement

கடந்த 8ம்தேதி அனிச்சம்பாளையம் கரையோரத்தில் இருந்த 9 ஆமைகளை, இவர்கள் உயிருடன் பிடித்தனர். பின்னர், அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான குட்டுக்காடு பகுதியில், அந்த ஆமைகளை உயிருடன் எரித்தனர். மேலும், இதை செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்து தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையறிந்த நாமக்கல் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். பின்னர் குமார், அஜீத் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கறிக்காக ஆமைகளை உயிருடன் எரித்து கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்த வனத்துறையினர், தலா ரூ.50,000 வீதம், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

Advertisement