தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வன்மத்தை வைத்து அரசியல் செய்தால் டி.டி.வி. தினகரன் ஒரு கவுன்சிலராகக் கூட வர முடியாது: ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்

 

Advertisement

சென்னை: டிடிவி தினகரனால் கவுன்சிலராக கூட முடியாது என ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார். கோடநாட்டில் ஆவணங்களை தேடிச் சென்றபோது கொலைகள் நடந்ததாக டிடிவி தினகரன் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்; ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவை கைப்பற்ற டி.டி.வி. தினகரன் முயற்சித்தார், ஆனால் அது முடியவில்லை. அதிமுகவை அபகரிக்க முடியாததால் ஏற்பட்ட விரக்தியில் கோடநாடு கொலை குறித்து டிடிவி பேசி வருகிறார்.

டி.டி.வி. தினகரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி வருகிறார். டி.டி.வி. தினகரனுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை; பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்று என்கிறார். ஆயிரக்கணக்கானவர்களை டிடிவி தினகரன் அனாதை ஆக்கிவிட்டார். டிடிவியை நம்பிச் சென்ற 18 எம்எல்ஏக்கள் அரசியல் அனாதைகள் ஆகிவிட்டனர். செல்வாக்கோடு இருந்த டிடிவி தினகரன், ஜெயலலிதா இறந்த பிறகு அனைத்தையும் இழந்து நிற்கிறார். நானும் ரவுடிதான் என வடிவேல் செல்வதுபோல்தான் தான் சிம்ம சொப்பனம் என டிடிவி நினைக்கிறார்.

டிடிவி தினகரன் 23ம் புலிகேசியாகிவிட்டார். முதலமைச்சராக இருக்கும்போது ஜெயலலிதா சிறைக்கு சென்றார், அதற்கு யார் காரணம்? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உரிய சிகிச்சை அளித்தீர்களா? தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தால் நாங்களும் செய்வோம். வன்மத்தை வைத்து அரசியல் செய்தால் டி.டி.வி. தினகரன் ஒரு கவுன்சிலராகக் கூட வர முடியாது. தை பிறந்தால் வழி பிறக்கும்; மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறினார்.

Advertisement

Related News