தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிடிவி.தினகரனை கூட்டணியில் சேர்க்க நடவடிக்கை: அண்ணாமலை பேட்டி

சென்னை: என்டிஏ கூட்டணியில் சேரும்படி டிடிவி.தினகரனை விரைவில் சந்தித்து அழைக்க உள்ளதாக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பாஜவைச் சேர்ந்த அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாதவரம் அருகே மாத்தூரில் நடந்தது. அறக்கட்டளை நிர்வாகி எம்.ஏ.குமரன் தலைமை வகித்தார். விழாவில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு 25 மாணவர்களுக்கு கல்வி நிதி, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisement

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை காப்பாற்றியது பாஜ தான் என அவர் கூறியிருப்பது உண்மைதான். தமிழகத்தின் நலனில் பாஜ அக்கறையுடன் செயல்பட்டுள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது என தேசிய ஜனநாயக் கூட்டணி தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதை ஏற்று தமிழக பாஜ தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அமமுக தலைவர் டிடிவி.தினகரனை விரைவில் சந்திக்க உள்ளேன். அப்போது தமிழகத்தின் நலன் கருதி அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து நண்பர் என்ற முறையில் விவாதிக்க உள்ளேன். தூத்துக்குடியில் விஜய்யின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டபோது திருச்சி நிகழ்ச்சியில் பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து போலீசார் தெரிவித்துள்ளனர். விஜய்க்கு கூட்டம் வருவதை வரவேற்கும் அதே நேரத்தில் பொதுச் சொத்துகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தீங்கு விளைவிக்காமல் கூட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement