உண்மையான தீர்வு காண வேண்டும்: சசிகலா
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு நேற்று ஆறுதல் கூறிய சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாவட்ட கண்காணிப்பாளரிடம் கட்சி நிர்வாகிகள் லெட்டர் கொடுத்ததும் அனுமதி கொடுக்க மாட்டார்கள். நான்கு நாளோ, ஒரு வாரமோ டைம் எடுத்து கொண்டு செல்வார்கள்.
Advertisement
இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது. இன்று கிட்டத்தட்ட 39 பேர் உயிரை பறிகொடுத்து இருக்கிறோம். எனவே, ஒன்றிய அரசு தலையிட்டு இதற்கு உண்மையான தீர்வு காண வேண்டும். சிறு குழந்தைகள் இறந்துள்ளது. பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் இறந்துள்ளனர். இது குறித்து அரசு விசாரணையை விரைவில் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement