தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறக்கட்டளை நிலம் தனியாரிடம் ஒப்படைப்பு பொதுமக்கள் நூதன போராட்டம்

*விகேபுரத்தில் பரபரப்பு

Advertisement

விகேபுரம் : அறக்கட்டளைக்கு சொந்தமான 5.51 ஏக்கர் நிலத்தை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்டோர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் விகேபுரம் நகராட்சி முதலியார்பட்டி என்ற முத்து நகரில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகேயுள்ள வடமலை சமுத்திரத்தில் அர்த்த சாம பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான 5.51 ஏக்கர் நிலத்தை பல நூற்றாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அந்த இடத்தை இவர்களுக்கு குத்தகைக்கு தராமல் தனி நபர் ஒருவருக்கு குத்தகைக்கு தந்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன் குத்தகை பெற்றவர் அவ்விடத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனைக்கண்ட முதலியார்பட்டி மக்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் முறையாக பதிலளிக்காததால் ஊர் மக்கள் அதிருப்தியடைந்தனர்.

இதையடுத்து நேற்று காலை வடமலை சமுத்திரத்தில் உள்ள பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான இடத்தின் அருகே ஊர் தலைவர் பூபதி, செயலாளர் வைகுண்ட ராஜா, பொருளாளர் கண்ணன், முன்னாள் நிர்வாகிகள் பாஸ்கர் பால், தபசு மற்றும் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அவ்விடத்தில் சமையல் செய்து சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கவுன்சிலர் இமாக்குலேட் கூறுகையில், ‘பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான 5.51 ஏக்கர் நிலத்தை முதலியார்பட்டி மக்கள் பல நூற்றாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.

இப்பகுதியில் நெற் களம் அமைத்தும் இங்குள்ள பனை மரங்களை பயன்படுத்தியும் தொழில் செய்து வந்தனர்.

ஆனால் தற்போது பிள்ளையன் கட்டளை தனி நபருக்கு இந்த இடத்தை ரசீது போட்டு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த இடத்தை முதலியார்பட்டி மக்களுக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்’ என்றார்.

Advertisement