தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடியிடம் போனில் ரஷ்ய அதிபர் புடின் விளக்கம்

புதுடெல்லி: பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அலாஸ்காவில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து விளக்கி உள்ளார். அமெரிக்காவின் அலாஸ்காவில் கடந்த 15ம் தேதி அதிபர்கள் டிரம்ப், புடின் இடையே உச்சி மாநாடு நடந்தது. சுமார் 3 மணி நேரம் இரு தலைவர்கள் பேசிய போதிலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அலாஸ்காவில் நடந்த டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடியிடம், அதிபர் புடின் விளக்கம் அளித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘எனது நண்பர் அதிபர் புடினின் தொலைபேசி அழைப்புக்கும், அலாஸ்கா உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான அவரது சந்திப்பு குறித்து தகவல்களை பரிமாறிக் கொண்டதற்கும் நன்றி தெரிவிக்கிறேன். உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. வரும் நாட்களில் எங்களின் தொடர்ச்சியான பரிமாற்றங்களை எதிர்நோக்குகிறேன்’’ என கூறி உள்ளார்.

Advertisement

Related News