தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பரஸ்பரம் மோதிக்கொண்ட நிலையில் டிரம்புடன் கைகோர்த்த இந்திய வம்சாவளி மேயர்

வாஷிங்டன்: கடும் விமர்சனங்களை மறந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், நியூயார்க் நகரப் புதிய மேயரும் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4ம் தேதி நடந்த தேர்தலில் நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக ஜனநாயக சோசலிசவாதியான இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது இவரை, ‘கம்யூனிசப் பைத்தியம்’ என்று அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்ததுடன், இவர் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்திற்கான ஒன்றிய அரசின் நிதியை நிறுத்துவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார்.

Advertisement

மம்தானியும் டிரம்பின் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்த்து வந்ததால், வரும் ஜனவரி 1ம் தேதி அவர் பதவியேற்ற பிறகு இருவருக்கும் இடையில் கடும் மோதல் போக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை, மம்தானி நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் தலைகீழ் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. மிகவும் சுமூகமாக நடந்த இந்தச் சந்திப்பின் போது, பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு மற்றும் குடியேற்றப் பிரச்னைகள் குறித்து இருவரும் விரிவாகப் பேசினர்.

சந்திப்புக்குப் பின் பேசிய டிரம்ப், மம்தானியை ‘பகுத்தறிவு மிக்க நபர்’ என்றும், ‘எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்’ என்றும் பாராட்டியுள்ளார். இதேபோல், ‘கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நகர மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்’ என மம்தானி குறிப்பிட்டுள்ளார். எதிரும் புதிருமாக இருந்த இருவரும் மக்கள் நலனுக்காகக் கைகோர்த்துள்ளது அமெரிக்க அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News