தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிரம்ப் பேச்சை திருத்திய விவகாரம்; பிபிசி இயக்குநர் , பெண் சிஇஓ ராஜினாமா

லண்டன்: கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அதிபர் டிரம்ப் ஆற்றிய உரை, கேபிடல் ஹில் கலவரத்தை தூண்டும் விதமாக இருந்தது என பிபிசி பனோரமா ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் டிரம்ப் பேசிய 2 தனித்தனி வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. ஒரு மணி நேர இடைவெளியில் டிரம்ப் பேசிய பேச்சுகளில், ‘அனைவரும் அமைதியாக போராட வேண்டும்’ என அவர் கூறிய பேச்சுகள் கத்திரிக்கப்பட்டு, ‘கடுமையாக போராடுவோம்’ என்கிற பேச்சுகள் மட்டும் இடம் பெற்றிருந்தன.

Advertisement

இந்நிலையில், டிரம்ப் பேச்சை எடிட் செய்து பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தலைமைப் பதவியில் இருக்கும் 2 நபர்கள் ஒரே நாளில் பதவி விலகியது பிபிசி நிர்வாகத்தில் பெரும் காலியிடத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த ராஜினாமாவை வரவேற்றுள்ள அதிபர் டிரம்ப், தனது பேச்சை திரித்து வெளியிட்டவர்கள் மாட்டிக் கொண்டதால் ராஜினாமா செய்திருக்கிறார்கள் என கூறி உள்ளார். போலி பத்திரிகையாளர்களுக்கு எதிராக டிரம்ப் போராடி வருவதாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறி உள்ளார்.

டிரம்ப் மிரட்டல்: தனது பேச்சை திரித்து வெளியிட்டது தொடர்பாக, சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து பிபிசிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிபிசி தெரிவித்துள்ளது.

Advertisement