தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து; நள்ளிரவில் வெடித்து சிதறிய ‘காஸ்’ சிலிண்டர்கள்: ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில், எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் லாரி ஒன்று மற்றொரு லாரியுடன் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

இந்த நிலையில், அதேபோன்ற கோர விபத்து நேற்று இரவு, இதே சாலையில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மற்றொரு லாரியுடன் மோதியதில் தீப்பிடித்தது. இந்தத் தீ மளமளவெனப் பரவி, லாரியில் இருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறின. பல கிலோமீட்டர் தூரத்திற்கு தீப்பிழம்புகளும், வெடிச்சத்தமும் கேட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் பிரேம் சந்த் பைரவா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது அவர், ‘விபத்துக்குள்ளான லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களைக் காணவில்லை. அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்பு குறித்த எந்தத் தகவலும் இல்லை’ என்றார்.

Advertisement

Related News