தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

லாரி மீது மின்கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து ரயில் பாதையில் விழுந்தது

*பயணிகள் ரயில் நிறுத்தம்

மானாமதுரை : மானாமதுரை ரயில்வே கேட் அருகே மின்கம்பியில் உரசி லாரியில் தீ விபத்து நடந்ததால், முன்னெச்சரிக்கையாக பயணிகள் ரயில் திருப்பாச்சேத்தியில் நிறுத்தப்பட்டது.திருச்சி மாவட்டம், மருங்காபுரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). வைக்கோல் வியாபாரி.

இவர் நேற்று மதியம் 2 மணிக்கு மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் வைக்கோல் கட்டுகளை வாங்கி தனது லாரியில் ஏற்றிக் கொண்டு மதுரைக்கு சென்றார். கட்டிக்குளம் ரோட்டில் உள்ள முத்தனேந்தல் சுடுகாடு அருகே சென்றபோது மின்கம்பியில் லாரி உரசியுள்ளது. இதில் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகள் தீப்பிடித்து மளமளவென எரியத் துவங்கியது.

மதுரை - மானாமதுரை ரயில்பாதையில் உள்ள முத்தனேந்தல் ரயில்வே கேட்டை கடக்கும்போது எரிந்து கொண்டிருந்த வைக்கோல் கட்டுகள் ரயில்பாதையில் விழுந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கேட் கீப்பர் லாரியை நிறுத்துமாறு கூறினார்.

ரயில்பாதையில் வைக்கோல் கட்டுகள் எரிவதை பார்த்த கேட் கீப்பர், மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயிலை திருப்பாச்சேத்தி ரயில்நிலையத்தில் நிறுத்தினர்.

முத்தனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையம் முன் நிறுத்தப்பட்ட லாரியில் தீ எரிந்து கொண்டிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், குடங்களில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

அதற்குள் தீயணைப்புத்துறையினர் வந்து தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.

திருப்பாச்சேத்தி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம் பயணிகள் ரயில் 20 நிமிட தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது. இதுதொடர்பாக மானாமதுரை ேபாலீசார், ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Related News