தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சியில் 2.3 ஏக்கரில் அமைகிறது ரூ.5.5 கோடியில் நவீன மினி விளையாட்டு மைதானம்: டெண்டர் கோரியது மாநகராட்சி; 8 மாதத்தில் பணியை முடிக்க திட்டம்

Advertisement

திருச்சி: திருச்சியில் 2.3 ஏக்கர் பரப்பளவில் ரூ.5.5 கோடி மதிப்பில் நவீன மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான டெண்டரை மாநகராட்சி நிர்வாகம் கோரியுள்ளது. இந்த பணிகளை 8 மாதத்தில் முடிக்க திட்டமிப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் அண்ணா விளையாட்டு அரங்கம் தவிர வேறு விளையாட்டு அரங்கங்கள் ஏதும் இல்லாத நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், மாநகரப்பகுதிகளில் முக்கியமான குடியிருப்பு பகுதிகளில் சிறிய அளவிலான விளையாட்டு அரங்கங்களை அமைக்க மாநகராட்சி சார்பில் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை அருகே 2.3 ஏக்கர் பரப்பளவில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தில், நீச்சல் கற்றுக்கொள்பவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சி பெற விரும்புவர்கள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு நவீன நீச்சல் குளமும் அமைக்கப்படவுள்ளது. மேலும் உள்விளையாட்டு அரங்க (Indoor Games) விளையாட்டுகளான பூப்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுக்கான அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது.

இந்த விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலான அதிநவீன உள்விளையாட்டு அரங்கங்களாக இவை அமைக்கப்படும். இதில் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடமும் கட்டப்படவுள்ளது. இது உடற்கட்டமைப்பு (ஆணழகன்) போட்டிகள் மற்றும் வலு தூக்கும் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு பயிற்சி எடுக்கும் வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும். இவர்களுக்கு மட்டுமல்லாது, உடல் எடையை சீராக வைத்து, உடல் ஆரோக்கியத்தை பேண நினைக்கும் பொதுமக்களுக்கும் இந்த உடற்பயிற்சி மையம் வரப்பிரசாதமாக இருக்கும். இந்த பணிகளை டிசம்பர் மாதத்தில் துவங்கி, 8 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5.5 கோடி மதிப்பில் டெண்டர் கோரி, சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News