தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி டூ கோவைக்கு 2 1/2 மணி நேரத்தில் வந்த ஆம்புல்ன்ஸ் இதய அறுவை சிகிச்சைக்காக 220 கி.மீ பயணித்த குழந்தை

கோவை: திருச்சி நவகுடி பகுதியை சேர்ந்தவர்கள் திருமுருகன், துர்காதேவி தம்பதி. கர்ப்பிணியான துர்காதேவி ஒரு வாரத்துக்கு முன்பு பிரசவத்திற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு துர்காதேவிக்கு கடந்த 27ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் குழந்தையை பரிசோதனை செய்தபோது, இதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Advertisement

அங்கிருந்து கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 1 மணிக்கு திருச்சியில் இருந்து குழந்தையுடன் ஆம்புலன்ஸ் கோவை புறப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காத வகையில் போலீசார், கிரீன் காரிடர் அலர்ட் ஏற்படுத்தி போக்குவரத்தை சரி செய்து கொடுத்தனர். இதனால் இரண்டரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கோவைக்கு வந்தடைந்தது.

திருச்சியில் இருந்து கோவைக்கு பயண தூரம் சுமார் 220 கிலோ மீட்டர். குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் போலீசார் வழிவகை செய்து கொடுத்ததால் இரண்டரை மணி நேரத்திலேயே குழந்தையுடன் ஆம்புலன்ஸ் கோவைக்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

Advertisement

Related News