திருச்சி அருகே நகை வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்க நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை
Advertisement
திருச்சி: திருச்சி சிறுகனூர் அருகே நகை வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். சென்னை சவுகார்பேட்டை ஆர்.கே.ஜுவல்லரி மேலாளர், திண்டுக்கல்லில் நகைகள் விற்றுள்ளார். திண்டுக்கல்லில் நகைகளை விற்று எஞ்சிய 10 கிலோ தங்கத்தை எடுத்து வந்தபோது கொள்ளை அடித்துள்ளனர். காரை வழிமறித்த மர்மநபர்கள் மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்துள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement