தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி சிறையில் இருந்து தப்பிய கைதி சிக்கினார்: 3 சிறை காவலர்கள் சஸ்பெண்ட்

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சிக்கினார். இது தொடர்பாக சிறை காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(48). இவர் மீது கும்பகோணம் தாலுகா நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜேந்திரன் 2023ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
Advertisement

இந்நிலையில் கடந்த 11ம் ேததி காலை 6 மணிக்கு மத்திய சிறையின் முகப்பு பகுதியில் உள்ள சிறை பஜாரில் பணியாற்றுவதற்காக ராஜேந்திரன் உள்ளிட்ட 5 கைதிகளை சிறைக்காவலர் அழைத்து சென்றார். அங்கு பணி முடிந்து காலை 8.30 மணியளவில் சிறைக்கு கைதிகள் திரும்பினர். அப்போது சோதனை நடத்தியபோது ராஜேந்திரனை காணவில்லை. இதையடுத்து சிறைச்சாலை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அவர் தப்பி ஓடியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான ராஜேந்திரனை தேடினர். இந்நிலையில் திருவெறும்பூர் அடுத்த சின்னசூரியூர் குளக்கரையில் பதுங்கியிருந்த ராஜேந்திரனை போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் சிறை தலைமை காவலர் ஜஸ்டின்ராஜ், சிறை காவலர்கள் தினேஷ், சண்முகராஜா ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.

Advertisement