தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசு பஸ் மீது கார் மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

சமயபுரம்: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் ஜோசப் (21). சென்னையில் வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த 29ம்தேதி தென்காசியில் நடந்த நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றிருந்த ஜோசப், அங்கிருந்து நேற்றுமுன்தினம் மாலை சென்னை புறப்பட்டார். அப்போது ஜோசப்பின் அண்ணனின் நண்பர்களான செல்வராஜ்(37), விஜயபாபு(31) ஆகியோரும் உடன் வருவதாக கூறினர். இதையடுத்து ஜோசப் தனது காரில் செல்வராஜ், மனைவி யசோதா(29), ஒன்றரை வயது பெண் குழந்தை அனோனியா மற்றும் விஜயபாபு ஆகியோரையும் ஏற்றிக்கொண்டார்.

Advertisement

கார் நேற்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி மாவட்டம், சிறுகனூர் அடுத்த நெடுங்கூர் பகுதியில் வந்தபோது சாலையோரம் பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கி யசோதா, விஜயபாபு, ஒன்றரை வயது குழந்தை அனோனியா ஆகியோர் பலியாகினர். டிரைவர் ஜோசப், செல்வராஜ் ஆகியோர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Advertisement