தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி கஞ்சா பறிமுதல்: தஞ்சை பயணி சிக்கினார்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த தஞ்சை பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தது. பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் உயர் ரக கஞ்சா (ஹைட்ரோபோனிக் கஞ்சா) இருப்பது கண்டறியப்பட்டது.

Advertisement

இது ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா ஆகும். தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. கஞ்சாவை கடத்தி வந்த தஞ்சையை சேர்ந்த அப்துல் அமீரை கைது செய்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், இவர் யாருக்காக கஞ்சா கடத்தி வந்தார், வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த ஒரு பயணி, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமை குஞ்சுகளை டப்பாக்களில் அடைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்த 2,477 ஆமை குஞ்சுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் ஆமை குஞ்சுகள் ஒப்படைக்கப்பட்டது. ஆமை குஞ்சுகள் கடத்தி வந்த நபரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் உயர் ரக கஞ்சா, ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement