தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம்

டெல்லி: தீர்ப்பாயங்கள் சீர்திருத்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் நீதிமன்றத்துக்கு அநீதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் செயல்பாடு இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தீர்ப்பாயங்கள் சீர்திருத்த வழக்கை கடந்த வரம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசு தரப்பு தெரிவித்தது.

Advertisement

ஆனால் ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்த தலைமை நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து. இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி இன்று தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜராகி நாளை அட்டர்னி ஜெனரல் ஆஜராக முடியாத நிலையில், இருப்பதால் வழக்கை 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ஏற்கனவே இருமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆஜராக பல வழக்கறிஞர்கள் ஒன்றிய அரசிடம் உள்ளபோது மீண்டும் அவகாசம் கோருவது என்? - இது நீதிமன்றத்துக்கு இழக்கும் அநீதி என்று கடுமையாக விமர்சித்தார். ஏற்கனவே வழக்கை ஐந்து நீதிபதிகள் வழக்கை கொண்ட அமர்வுக்கு மாற்றக்கோரி ஒன்றிய அரசு நள்ளிரவில் மனுதாக்கல் செய்ததையும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். ஒன்றிய அரசின் செயல்பாடு குறித்து கடுமையான அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி நாளை வேறு எந்த வழக்கையும் விசாரணைக்கு எடுக்காமல் நாள் முழுவதும் இந்த வழக்கை விசாரித்து முடித்து. வார இறுதியில் தீர்ப்பு எழுதலாம் என்று திட்டமிட்டிருந்தை குறிப்பி இருந்தார்.

நான் ஓய்வு பெற்ற பிறகு தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டு என்று ஒன்றிய அரசு நினைக்கிறதா? அப்படியென்றால் அதை வெளிப்படையாக தெரிவிக்கலாமே என்றும் தலைமை நீதிபதி அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தார். நாளை இந்த வழக்கு விசரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மற்ற வழக்கறிஞர்களின் வாதம் கேட்கப்படும். அட்டர்னி ஜெனரல் நாளை வர முடியவில்லை என்றல் 10ஆம் தேதி ஆஜராகி வாதிடலாம். அன்றும் அட்டர்னி ஜெனரல் வரவில்லை என்றல் விசாரணையை அத்துடன் முடித்து தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.

Advertisement