தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓடும் பேருந்தின் மீது சாய்ந்த மரம்; டிரைவர் உட்பட 5 பேர் உடல் நசுங்கி பலி: உதவ மனமின்றி வீடியோ எடுத்த அவலம்

பாராபங்கி: உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டம் ஜைத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று கனமழை பெய்துகொண்டிருந்தது. அப்போது, சாலையோரம் நின்றிருந்த பழமையான ராட்சத மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து, அவ்வழியாக வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்தின் மீது விழுந்தது. இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில், ஓட்டுநர் சந்தோஷ் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த காணொலி சமூக ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, காயங்களுடன் பேருந்துக்குள் சிக்கியிருந்த ஷைல் குமாரி என்ற பெண்,

விபத்தை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கோபத்துடன், ‘நாங்கள் இங்கே செத்துக் கொண்டிருக்கிறோம், நீங்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?’ என்று ஆவேசமாகப் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையும், உள்ளூர் நிர்வாகமும் மீட்புப் பணிகளை மேற்கொண்டன. அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Related News