தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரக்காணம் பகுதியில் அலைகளின் சீற்றத்தால் கரையோரம் மண்ணரிப்பு

Advertisement

மரக்காணம்: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக கடற்கரையையொட்டி உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மிதமான மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த காற்று சுழற்சி அடுத்த நாட்களில் காற்றழுத்த பகுதியாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ் கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் மரக்காணம் பகுதி கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. இந்த சீற்றத்தால் கடல் அலைகள் சுமார் 10 மீட்டர் உயரத்திற்கு தரைப்பகுதியை நோக்கி வருகிறது. இதன் காரணமாக கடற்கரை ஓரம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் இந்த கடல் அலை சீற்றத்தால் மரக்காணம் பகுதியில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது பைபர் படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Advertisement

Related News