தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிகிச்சைக்கு வந்த மூதாட்டி உயிரிழப்பு ஸ்டான்லி மருத்துவமனை சூறை; உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்: மகன் உள்பட 4 பேர் கைது

Advertisement

தண்டையார்பேட்டை: சிகிச்சைக்கு வந்த மூதாட்டி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த மகன் மற்றும் உறவினர்கள் ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்களிடம் தகராறு செய்து மருத்துவமனையை சூறையாடினர். தடுக்க வந்த எஸ்.ஐ.,யை தாக்கிய மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பிலோமினா (75), இவருக்கு மூச்சிரைப்பு நோய் காரணமாக கடந்த 30ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் அந்தோணிராஜ் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர், அங்கிருந்த கண்ணாடி கதவை உடைத்து உள்ளனர்.

இதை அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் அசோக் குமார் தடுத்துள்ளார். அவரையும் தாக்கி உள்ளனர். புகாரின் அடிப்படையில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் (42), பிரான்சிஸ் (35), திலீப்குமார் (19), கிஷோர் (21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News