தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எல்லா நோய்களுக்கும் சிகிச்சை பெறமுடியும்; மருத்துவ காப்பீட்டில் வயது வரம்பு நீக்கம்: புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் விதிகள் அறிவிப்பு

புதுடெல்லி: எல்லா நோய்களுக்கும் சிகிச்சை வழங்கும் வகையிலும், மருத்துவ காப்பீட்டில் வயது வரம்பு முறையை ரத்து செய்தும், புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Advertisement

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) வெளியிட்ட அறிவிப்பில், ‘அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து பிரிவினருக்கும் வயது வித்தியாசமின்றி சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 1ம் தேதி முதல் சில நிபந்தனைகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கான 65 வயது வரம்பு தளர்த்தப்படுகிறது. அதனால் எந்த வயதினரும் மருத்துவ காப்பீடு பெறமுடியும். பல்வேறு வயதினருக்கும் காப்பீடு தடையின்றி கிடைப்பதை சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள், மாணவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றவற்றுக்கு தனியான கொள்கைகளை காப்பீடு நிறுவனங்கள் உருவாக்கி கொள்ளலாம். எந்த வகையான நோய்களுக்கும் காப்பீடு வசதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

குறிப்பாக புற்றுநோய், இதய நோய், சிறுநீரக நோய், எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலிசியை மறுக்கக் கூடாது. காப்பீட்டு பிரீமியத்தை தவணை முறையில் செலுத்த வசதிகள் செய்து தர வேண்டும். பொது மற்றும் சுகாதார காப்பீட்டு சேவைகளை வழங்கும் நிறுவனங்களால் மட்டுமே, பயணக் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்க முடியும். ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் சிகிச்சை முறைகளுக்கு வரம்பு நிர்ணயம் இல்லை. மூத்த குடிமக்களின் புகார்களைத் தீர்க்க சிறப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News