தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்மாற்றி பழுதானதால் சீரான மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதி

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் ஊராட்சி பாக்குப்பேட்டை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2008ம் ஆண்டு 100 கே.வி. திறன்கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றி 17 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் நிலையில் குடியிருப்புகள் அதிகமானதால் மணவாள நகர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பாக்குப்பேட்டை கிராம மக்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு மும்முனை மின்சாரத்தில் ஒரு முனை மின்சாரம் பழுதடைந்தது. இதனால் பொதுமக்களுக்கு மின் அழுத்தம் காரணமாக குறைந்த மின்சாரம் மட்டுமே கிடைப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏசி, பிரிட்ஜ், மிக்சி, வாஷிங் மெஷின் போன்ற மின்சாதனப் பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மணவாள நகரில் உள்ள மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News