ரயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?: மும்பை ஐகோர்ட் கேள்வி
அப்போது, “ரயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?” என ரயில்வே அதிகாரிகளுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ரயில் விபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ரயில்வேதுறை எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என அதிருப்தி தெரிவித்தனர். நாளொன்றுக்கு10 பேர் ரயில் விபத்துகளில் உயிரிழப்பது, ரயில்வே துறை கவலைக்கிடமாக உள்ளது என்பதை உணர்த்துவதாக நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து, ரயில்வே துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விபத்து தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிபதியிடம் தெரிவித்தனர். அதற்கு, பூஜ்ஜிய உயிரிழப்பு என்ற நிலையை அடைய தானியங்கி கதவு அமைப்பை உருவாக்குவதே முக்கியம் என கூறினர். மேலும், “நாங்கள் ஒன்றும் ரயில்வே பொறியியல் வல்லுனர்கள் அல்ல ஆனால் தானியங்கி கதவை நிறுவ உத்தரவிட அதிகாரம் பெற்றவர்கள்” என தெரிவித்தனர். ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகளை நிறுவ பரிசீலிக்குமாறு ரயில்வே அதிகாரிகளை அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.