தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில் விபத்துகள் அதிகரிப்பு எதிரொலி ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கான கூடுதல் பணிச்சுமை குறைப்பு: தெற்கு ரயில்வே முடிவு

Advertisement

சென்னை: தெற்கு ரயில்வே, ஒரு முக்கிய செயல்பாட்டு மறுசீரமைப்பு முடிவை அறிவித்துள்ளது. இதன்படி, ஸ்டேஷன் மாஸ்டர்களின் பொறுப்புகள், செப்டம்பர் 1 முதல், ரயில் இயக்கம் மற்றும் பாதுகாப்பு என்ற முக்கிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படும். இந்த முடிவு, ஸ்டேஷன் மாஸ்டர்கள் தங்கள் முழு கவனத்தையும் முக்கிய செயல்பாட்டு பணிகளில் செலுத்தி, ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் செயல்பாட்டு மற்றும் வணிக துறைகளுக்கு இடையே நடந்த விவாதங்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், தெற்கு ரயில்வேயில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இவை ஸ்டேஷன் மாஸ்டர்களின் அதிகப்படியான பணிச்சுமை காரணமாகவும், அவர்களால் அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய முடியாததால் ஏற்பட்டவை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தற்போது, ஸ்டேஷன் மாஸ்டர்கள், ரயில் இயக்கத்திற்கு அப்பாற்பட்ட பல்வேறு பொறுப்புகளை வகிக்கின்றனர். இதில், டிக்கெட் விற்பனை போன்ற வணிகப் பணிகள், ரயில் பயண தகவல்களை ஒலிபரப்புதல், பயணிகளிடம் கருத்து கேட்பது, பயணிகள் பெட்டி அடையாள அமைப்பை கண்காணிப்பது, நிலையத்தின் தூய்மை பணியாளர்களை மேற்பார்வையிடுவது அவர்களின் பணியாக உள்ளது.

ஆனால், செப்டம்பர் 1 முதல், இந்த கூடுதல் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் விடுவிக்கப்படுவார்கள். இந்த வணிக மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாற்று ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், ஸ்டேஷன் மாஸ்டர்கள் இனி ரயில் இயக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்த முடியும்.

அவர்களின் முக்கிய பணிகளாக, அடுத்தடுத்த நிலையங்களுக்கு ரயில்களின் முக்கிய தகவல்களை சேகரித்து அனுப்புவது மற்றும் சமிக்ஞை அமைப்பின் துல்லியமான செயல்பாட்டை உறுதி செய்வது ஆகியவை இருக்கும். இந்த முடிவு, குறிப்பாக அதிக ரயில் இயக்கம் உள்ள பரபரப்பான நிலையங்களில் பணிபுரியும் ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டு எடுக்கப்பட்டது. இந்த நிலையங்களில், பல்வேறு பொறுப்புகளின் சுமை மிக அதிகமாக இருப்பதாக அவர்கள் கூறியிருந்தனர்.

இந்தக் கோரிக்கைகளை ஏற்று, தெற்கு ரயில்வே நிர்வாகம், செப்டம்பர் 1, 2025 முதல் ஸ்டேஷன் மாஸ்டர்களின் பொறுப்புகளை ரயில் இயக்கம் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு மட்டும் கட்டுப்படுத்த முடிவு செய்தது. இதற்காக வணிக மற்றும் நிர்வாக பணிகளுக்கு மாற்று ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இனி ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு பணிச்சுமை குறைந்து, அவர்கள் தங்களுக்கான வேலைகளை மட்டும் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News