தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில் பயணிகள் சாப்பிட்டு குப்பைத்தொட்டியில் வீசிய கவர்களை மீண்டும் பயன்படுத்த முயன்ற சம்பவம்: ஐஆர்சிடிசி நடவடிக்கை

சென்னை: ரயில் பயணிகள் சாப்பிட்டு குப்பை தொட்டியில் வீசிய கவர்களை மீண்டும் பயன்படுத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து பீகாருக்கு செல்லும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16601) ஏற்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி, உணவு பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட்டரிங் ஊழியர்கள், பயணிகளால் பயன்படுத்தப்பட்ட அதாவது ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு பொட்டல அலுமினிய கவர்கள் (அலுமினியம் ஃபாயில்) உணவு பாத்திரங்களை ரயிலின் சுத்திகரிப்பு அறையில் கழுவி, மீண்டும் பயன்படுத்த முயன்றதாக வைரல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisement

அந்த வீடியோவில், ரயில் பயணிகள் சாப்பிட்டு குப்பை தொட்டியில் வீசிய கவர்களை ரயில்வே ஊழியர்கள் எடுத்து சுத்தம் செய்யும் அறையின் டேபிளில் கழுவி, உணவு சேவைக்கு தயார் செய்யும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் இதற்கு ஐஆர்சிடிசி பதிலளித்துள்ளது. அதில், ‘இந்த விவகாரத்தில் தொடர்புடைய வியாபாரியை நீக்கி, அவரது உரிமத்தை ரத்து செய்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தனிமனித சம்பவமாகும். உணவு பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று ஐஆர்சிடிசி கூறியுள்ளது.

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டவை. இந்த ரயில்களில் சுத்தமான பராமரிக்கவும், சிறந்த கேட்டரிங் சேவைகள் போன்ற மேம்பாடுகளை வழங்குவதன் மூலம் பயணிகளின் வசதியை அதிகரிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், இந்த சம்பவம் இந்திய ரயில்வேக்களின் உணவு சேவைகளில் ஏற்படும் சுத்திகரிப்பு குறைபாடுகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. பயணிகள் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க மேலும் கண்காணிப்பு அமைப்புகளை அறிமுகப்படுத்தும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

Advertisement

Related News