தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஐநா பாதுகாப்பு கவுன்சில் குழுவுக்கு பாக்.தலைமை இந்திய வெளியுறவுக் கொள்கை சரிவின் சோகக்கதை: காங். விமர்சனம்

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய குழுவிற்கு பாகிஸ்தான் தலைமை தாங்க உள்ள நிலையில் நமது வெளியுறவு கொள்கை சரிந்துவிட்டதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 2025ம் ஆண்டுக்கான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலிபான் தடைகள் குழுவிற்கு பாகிஸ்தான் தலைமை தாங்க உள்ளது. மேலும் 15 நாடுகளை கொண்ட ஐநா அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் துணை தலைவராகவும் பாகிஸ்தான் இருக்கும். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன்கேரா தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மே 9ம் தேதி ஆபரேஷன் சிந்தூரின்போது சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. ஆபரேஷன் சிந்தூர் முடிந்த உடனேயே உலக வங்கியானது பாகிஸ்தானுக்கு 40பில்லியன் அமெரிக்க டாலரை வழங்குவதற்கு முடிவு செய்தது.

அதேபோல் ஏடிபி பாகிஸ்தானுக்கு 800மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. ஜூன் 4ம் தேதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலிபான் தடைகள் குழுவின் தலைவராகவும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் துணை தலைவராகவும் பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நிச்சயமாக நமது சொந்த வெளியுறவு கொள்கை சரிவின் சோகமான கதையாகும். ஆனால் பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கையை தொடர்ந்து நியாயப்படுத்துவதை உலக சமூகம் எவ்வாறு அனுமதிக்க முடியும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related News