தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரேஷன் பொருட்கள் வாங்கி திரும்பிய போது சோகம் முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு

*10 பேர் படுகாயம்

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில், சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குக்கிராமம் என்பதால் 3 கிமீ தூரம் உள்ள சின்னபொதிகுளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

நேற்று கூவர்கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த 11 பெண்கள், 2 ஆண்கள் என 13 பேர் ரேஷன் பொருட்களை வாங்கி விட்டு, ஒரு டிராக்டரில் ஏறி அனைவரும் வந்துள்ளனர். டிராக்டரை சின்னபொதிகுளத்தை சேர்ந்த கண்ணன் (45) ஓட்டி வந்துள்ளார்.

சின்னபொதிகுளம் அருகே உள்ள கண்மாய் கரையில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர் முதுகுளத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் கூவர்கூட்டத்தை சேர்ந்த பொன்னம்மாள் (62), ராக்கி (60), முனியம்மாள் (65) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 10 பேர் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து இளஞ்சம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், மருத்துவமனை முன்பு சாலைமறியல் ஈடுபட்டனர்.

முதல்வர் நிவாரணம்

விபத்து குறித்து தகலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.