தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக்கை பறிமுதல் செய்ததால் ஆத்திரம் டிராபிக் போலீஸ் ஏட்டு முகத்தில் பிளேடால் கிழிப்பு: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் கைது

விழுப்புரம்: போதையில் பைக் ஓட்டியதால் பைக்கை பறிமுதல் செய்த டிராபிக் போலீஸ் ஏட்டுவை பிளேடால் முகம், கையை கிழித்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(30). நேற்று முன்தினம் இரவு பைக்கில் விழுப்புரத்திற்கு வந்துள்ளார். அப்போது போதையில் சென்ற அவரை காந்தி சிலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ சண்முகம், ஏட்டு இளஞ்செழியன் ஆகியோர் மடக்கி பிடித்தனர். போதையில் வாகனம் ஓட்டியதால் அஜித்குமார் மீது வழக்கு பதிந்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement

தொடர்ந்து அகங்கிருந்து சென்ற அஜித்குமார் சிறிது நேரம் கழித்து, ரயில்நிலையம் அருகே போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு இளஞ்செழியன் முகம், கையில் பிளேடால் கிழித்து விட்டு தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ஏட்டு இளஞ்செழியனை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகர காவல்நிலைய போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிந்து, விழுப்புரம் சித்தேரிகரையில் மறைந்து இருந்து அஜித்குமாரை கைது செய்தனர்.

Advertisement

Related News