தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிராபிக் பைன் மெசேஜ் வந்தால் உஷார் போலியாக லிங்க் அனுப்பி லட்சக்கணக்கில் சுருட்டல்: வாரணாசி கும்பலை வளைத்த கொச்சி போலீஸ் தமிழ்நாட்டிலும் கைவரிசை காட்டியது அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா, குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க முக்கிய சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
Advertisement

வாகன உரிமையாளர்களின் செல்போனில் அபராதம் குறித்த விபரம் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும். தபாலில் செலானும் அனுப்பி வைக்கப்படும். வாகன உரிமையாளர்கள் செல்போனில் தங்களுக்கு வரும் லிங்கை பயன்படுத்தி அபராத தொகையை கட்டலாம். இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாகன உரிமையாளர்களுக்கு போலி பரிவாகன் லிங்க் அனுப்பி மோசடி நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு வாகன உரிமையாளர் தன்னுடைய செல்போனில் வந்த போலி பரிவாகன் செயலியில் கிளிக் செய்து ரூ.85 ஆயிரத்தை பறி கொடுத்தார். இதுகுறித்து அவர் கொச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலி பரிவாகன் லிங்க் அனுப்பியது உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த கும்பல் என தெரியவந்தது.

இதையடுத்து கொச்சி போலீசார் வாரணாசிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதுல்குமார் சிங் (32) மற்றும் மனிஷ் யாதவ் (24) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் டெலிகிராம் போட் என்ற செயலியின் மூலம் வாகனத்தின் விவரங்களை சேகரித்துள்ளனர்.

இவர்களிடம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2,700க்கும் அதிகமான வாகனங்களின் விவரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் உறவினரான 16 வயதான சிறுவன் தான் பரிவாகனின் போலி செயலியை உருவாக்கி உள்ளான் என்று போலீசார் தெரிவித்தனர். இருவரையும் வாரணாசியில் இருந்து இன்று கேரளாவுக்கு போலீசார் அழைத்து வருகின்றனர்.

Advertisement

Related News