தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று சந்திர கிரகணம்: திருப்பதி கோயிலில் இன்று 12 மணிநேரம் நடைஅடைப்பு

திருமலை: இன்று சந்திர கிரகணம் பிடிப்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணிநேரம் நடை அடைக்கப்படுகிறது. ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. சந்திர கிரகணம் இன்று இரவு 9:50 மணி முதல் நாளை அதிகாலை 1:31 மணி வரை கிரகணம் நீடிக்கும். எனவே திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று பிற்பகல் 3:30 மணி முதல் நாளை அதிகாலை 3 மணி வரை மூடப்படும். சந்திர கிரகணத்திற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு இன்று பிற்பகல் 3:30 மணிக்கு கோயில் மூடப்படும். கிரகணம் முடிந்த பின்னர் கோயில் கதவுகள் திறந்து சுத்தம் செய்து கிரகண தோஷ நிவாரண பூஜை, நித்ய பூஜை செய்யப்பட்ட பிறகு செப்டம்பர் 8ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கோயில் கதவுகள் மீண்டும் திறக்கப்படும்.

Advertisement

பக்தர்களுக்கான சுவாமி தரிசனத்திற்கு நாளை காலை 6 மணிக்கு பிறகு மீண்டும் அனுமதிக்கப்படும். சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து இன்று ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை போன்ற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள பல்வேறு இடங்களில் அன்னபிரசாத விநியோகம், தரிகொண்ட அன்னபிரசாத வளாகம், வைகுண்டம் காம்பளக்ஸ் அறைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் இன்று பிற்பகல் 3 மணியுடன் அன்னப்பிரசாதம் வழங்குவது நிறுத்தப்படும். இருப்பினும் பக்தர்களுக்கு 30,000 அன்னபிரசாதப் பாக்கெட்களில் விநியோகிக்கப்படும்.

Advertisement

Related News