தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர்கதையாகும் போக்குவரத்து நெரிசல் கடலூர் பாரதி சாலையில் நடை மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

*பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

Advertisement

கடலூர் : கடலூர் பாரதி சாலையில் காட்சி பொருளாக உள்ள நடை மேம்பாலத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் பாரதி சாலையில் புதுநகர் காவல் நிலையம் எதிரே தனியார் பள்ளி மாணவிகள் காலை, மாலை நேரங்களில் பிரதான சாலையான பாரதி சாலையை கடந்து பள்ளிக்கு சென்று வரும் நிலை இருந்தது.

அவ்வாறு சாலையை கடக்க முயலும்போது, மாணவிகள் வாகன விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க அப்பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, கடந்த 2018-19ம் ஆண்டு ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதற்காக சாலை இருபுறமும் ராட்சத இரும்பு தூண்கள் நிறுத்தி, அதன் மீது சுமார் 17 டன் இரும்பினால் நடைபாலம் வடிவமைக்கப்பட்டது.

மாணவிகள், பொதுமக்கள் எளிதில் ஏறி செல்லும் வகையில் படிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவிகள் சிரமமின்றி, எந்த வித ஆபத்துமின்றி எளிதாக சாலையை கடக்க வழிகாணப்பட்டது. ஆனால் இந்த நடை மேம்பாலத்தை மாணவிகள் பயன்படுத்தாமல் சாலையை கடந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் பள்ளி நேரத்தில் மேம்பாலம் அருகே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை தடை செய்து மாணவிகளை சாலையை கடக்க உதவுகின்றனர். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது தினந்தோறும் வாடிக்கையாக நடக்கிறது. இதனால் காலை நேரத்தில் அலுவலகத்திற்க்கு செல்லும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சரியான நேரத்திற்கு தங்கள் பணியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும் மாணவிகள் பாதுகாப்பாக சாலையை கடக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தாமல் காட்சிப்பொருளாக பயன்படுத்துவதால், இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே நிறைவேறாமல் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே இந்த நடை மேம்பாலத்தை மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement