தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுற்றுலா பயணிகள் பஸ் மீது தாவி குதித்து ஏறிய சிறுத்தை: கர்நாடகாவில் பரபரப்பு

Advertisement

பெங்களூரு: பன்னரகட்ட தேசிய உயிரியல் பூங்காவில் சபாரி பஸ் மீது சிறுத்தை ஒன்று தாவி குதித்து ஏறிய காட்சி சமூகவவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் சிலர் சபாரி வாகனத்தில் சுற்றிப்பார்க்க சென்றனர். அப்போது திடீரென ஒரு சிறுத்தை பஸ் மீது தாவி குதித்து ஜன்னல் கண்ணாடியை கால்களால் அடித்தது. பின்னர் அப்படியே பஸ்சின் மேற்கூரை மீது ஏறியது. இதனால் சுற்றுலா பயணிகள் பதற்றம் அடைந்தனர். பின்னர் அந்த சம்பவத்தை செல்போனில் படம் பிடித்தனர். பஸ்ஸை டிரைவர் மெதுவாக இயக்கியதை தொடர்ந்து சிறுத்தை கீழே குதித்து வழக்கமான தனது இருப்பிடத்துக்கு சென்று விட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சபாரி பஸ் ஜன்னல் கதவுகள் இரும்பு கம்பிகளால் பின்னப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை’ என்றனர்.

Advertisement