தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

 

Advertisement

உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி உள்ளது. இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அமாவாசை,பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களிலும், விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம்.அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது,சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சீரான அளவில் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளித்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர்.அவர்கள் அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட்டு, அருவியில் குளித்து சென்றனர். மேலும், கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் திருமூர்த்தி மலைக்கு வந்து அருவியில் குளித்து செல்கின்றனர்.

Advertisement