தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாரவிடுமுறை நாளான நேற்று ஏலகிரிமலை, ஜலகாம்பாறையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்

*நீண்டவரிசையில் காத்திருந்து படகுசவாரி

Advertisement

ஏலகிரி :வாரவிடுமுறை காரணமாக ஏலகிரிமலை மற்றும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அலைமோதியது. ஏலகிரி படகு இல்லத்தில் நீண்டவரிசையில் காத்திருந்து ஏராளமானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

வளிமண்டல சுழற்சி காரணமாக திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் திரண்டனர்.

இதேபோல் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலா தலமான ஏலகிரிமலையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இயற்கை எழில் நிறைந்து காணப்படும் இம்மலை தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இம்மலையில் படகு இல்லம், இயற்கை பூங்கா, பறவைகள் சரணாலயம், கதவநாச்சியம்மன் கோயில், சாகச விளையாட்டு தளங்கள் உள்ளிட்டவை உள்ளது. இந்நிலையில் வாரவிடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருந்தனர். இதனால் படகு இல்லம், பண்டேரா பறவைகள் சரணாலயம் ஆகியவற்றில் கூட்டநெரிசல் அதிகரித்திருந்தது.

கடந்த 2 நாட்களாக தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் உள்ளிட்டவற்றில் மக்கள் அலைமோதினர். இதேபோல் அங்குள்ள கொண்டை ஊசி முனைகளில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

இதேபோல் திருப்பத்தூர் அருகே ஏலகிரிமலையடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அண்மைக்காலமாக அவ்வப்போது பெய்துவரும் மழைக்காரணமாக தண்ணீர் கொட்டுகிறது.

இதில் வாரவிடுமுறை நாளான கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று காலை முதல் திரண்டு உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அங்குள்ள முருகன் கோயிலிலும் தரிசனம் செய்தனர். வெளியூர் சுற்றுலா வாகனங்கள் தொடர் வருகையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் இதனை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

Advertisement

Related News