தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னசேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 10 பேர் படுகாயம்

சின்னசேலம்: சின்னசேலம் அருகே விவசாய தொழிலாளர்கள் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாககுப்பம் கிழக்கு காட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (31). இவருடன் விஜய், குருசாமி உள்ளிட்ட 22 பேர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையை சுற்றி பார்க்க ஒரு வேனில் நேற்று காலை சுமார் 5 மணியளவில் வீட்டில் இருந்து கிளம்பி உள்ளனர்.
Advertisement

வேனை சின்னசேலம் அருகே உள்ள கூகையூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தகுமார் ஓட்டி சென்றார். நாககுப்பம் கிராமத்தை கடந்து பாண்டியங்குப்பம் எல்லையில் உள்ள வீரமுத்து கவுண்டர் என்பவரது நிலத்தின் அருகே வேன் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து வேனில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றி உள்ளனர்.

மேலும் தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் வேனில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் தொழிலாளி மணிமாறன் (28) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் திருமணமானவர். இவருக்கு ராஜேஸ்வரி (25) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மேலும் தமிழரசன் (11), ராமசாமி (54), உள்ளிட்ட 10 பேர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement