தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொப்பூர் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

Advertisement

சென்னை: தொப்பூர் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் தொடங்கியது. அதிமுக , பாமக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை புரிந்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவை சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு சட்டப்பேரவை தொடங்கியது.

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அப்போது உறுப்பினர் எஸ்.பி வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார். தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்தை இணைக்கும் தொப்பூர் கணவாய் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தருமபுரி மாவட்டத்தில் 5 கிலோமீட்டரும், சேலம் மாவட்டத்தில் 1.6 கிலோமீட்டரும் மொத்தம் 6.60 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலையை உயர்மட்ட பாலமாக அமைக்கும் பணியை 906 கோடி மதிப்பீட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாசலையும் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.

இப்பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. 2027ம் ஆண்டுக்குள் இந்த பணியை முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தருமபுரி மையப்பகுதியில் பாலம் அமைப்பதற்கான கோரிக்கை குறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரிக்கு கிழக்கு பகுதியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை நகரில் பல்வேறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.

 

Advertisement