தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவெக 2வது மாநில மாநாட்டுக்கு வந்த 1.30 லட்சம் வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாததால் அரசுக்கு வருவாய் இழப்பு: ஐகோர்ட் கிளையில் வழக்கு

மதுரை: தவெக 2வது மாநில மாநாட்டுக்கு வந்த 1.30 லட்சம் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், ஓராண்டு கட்டண வசூல் தொடர்பாக அறிக்கையளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயருத்ரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் கப்பலூர் முதல் உத்தங்குடி வரையிலான 31.2 கிமீ தூர சாலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண மையங்கள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை டோல் கட்டணம் வசூலாகிறது.

Advertisement

இந்தச் சாலையில் சமீப காலங்களில் அரசியல் கட்சிகளின் மாநாடு, பேரணி, மத அமைப்புகளின் மாநாடு, பேரணி, பொதுக்கூட்டங்கள், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் அனுமதி வழங்கப்படுகிறது. இவற்றால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. டோல் கட்டணம் செலுத்தி வாகனங்களில் பயணிப்பவர்கள் உரிய நேரத்தில் பயண இடத்தை சென்றடைய முடியாத நிலை ஏற்படுகிறது.

சமீபத்தில் இந்தச் சாலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த மாநாட்டுக்கு நெல்லை, தூத்துக்குடியிலிருந்து வந்த 1.30 லட்சம் வாகனங்கள் கப்பலூர், எலியார்பத்தி டோல்கேட்டில் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளன. இதனால் அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இதே சாலையில் டோல் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களிடம் பாகுபாடு பார்ப்பதாகும்.

எனவே, கப்பலூர் முதல் உத்தங்குடி வரையிலான மதுரை சுற்றுச்சாலையில் அரசியல் கட்சிகள், மத அமைப்புகளின் மாநாடு, பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க கூடாது என்றும், திருமண மண்டபம், வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்க தடை விதித்தும், ஏற்கனவே வழங்கிய அனுமதியை திரும்ப பெறுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் மனுதாரர் குறிப்பிட்டுள்ள சாலையில் கடந்த ஒரு ஆண்டில் எத்தனை வாகனங்கள் சென்றுள்ளன? எவ்வளவு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Advertisement

Related News