தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோதமாக இயங்கி வந்த மதம் சார்ந்த நிறுவனம்; கழிவறையில் அடைக்கப்பட்ட 40 சிறுமிகள் அதிரடி மீட்பு: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மத நிறுவனம் ஒன்றின் கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 40 சிறுமிகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றில், அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக மதம் சார்ந்த நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகாரளித்ததைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் அஸ்வினி குமார் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் குழு, பெண் காவலர்களுடன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை மேற்கொண்டது.

Advertisement

அப்போது, அதிகாரிகள் உள்ளே செல்வதற்கும், மேல் தளத்திற்குச் செல்வதற்கும் மதம் சார்ந்த நிறுவனம் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் உள்ளே நுழைந்து சோதனை செய்தபோது, மொட்டை மாடியில் இருந்த கழிவறை ஒன்று வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அதனைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஒன்பது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட 40 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அச்சத்தில் காணப்பட்ட அந்தச் சிறுமிகளால் தெளிவாகப் பேச முடியவில்லை என அதிகாரிகள் கூறினர். உடனடியாக அந்த மத நிறுவனம் மூடப்பட்டு, சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட குழந்தைகள் நலகாப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக முறையான பதிவு இல்லாமல் இயங்கி வந்த இந்த நிறுவனம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News