இன்று தியாகிகள் தினம் அமைச்சர்கள், மேயர் மலர்தூவி மரியாதை: தமிழ்நாடு அரசு தகவல்
Advertisement
இந்த ஆண்டு, தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணிமண்டபம் முகப்பில் அமைந்துள்ள தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார், தியாகி செண்பகராமன் சிலைகளுக்கு அரசின் சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். நிகழ்ச்சியில் மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர், என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Advertisement