தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று தியாகிகள் தினம் அமைச்சர்கள், மேயர் மலர்தூவி மரியாதை: தமிழ்நாடு அரசு தகவல்

Advertisement

சென்னை: சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்ந்திடும் வகையில், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணிமண்டபம் கலைஞரால் 1998 அக்டோபர் 2ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. மேலும், தியாகிகளை போற்றும் வகையில் கலைஞர் 1999 ஜூலை 17ம் தேதி தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் மார்பளவு சிலைகளையும், 2008ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி தியாகி செண்பகராமன் சிலையையும் கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் நிறுவி திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ஜூலை 17ம் தேதி தியாகிகள் தினம் என கலைஞரால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணிமண்டபம் முகப்பில் அமைந்துள்ள தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார், தியாகி செண்பகராமன் சிலைகளுக்கு அரசின் சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். நிகழ்ச்சியில் மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர், என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

Advertisement

Related News