தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு: 809 மையங்களில் நடைபெறுகிறது

சென்னை: தமிழ்நாட்டில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகியபணிகளை சார்ந்த 1996 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு https://www.trb.tn.gov.in வாயிலாக கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. தமிழ் 216, ஆங்கிலம் 197, கணிதம் 232, இயற்பியல் 233, வேதியியல் 217, தாவரவியல் 147, விலங்கியல் 131, வணிகவியல் 198, பொருளியல் 169, வரலாறு 68, புவியியல் 15, அரசியல் அறிவியல் 14, கணினி பயிற்றுநர் நிலை-1 பதவி 57, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பதவி 102 என மொத்தம் 1,996 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்காக ஜூலை 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று (அக்.12) நடைபெற உள்ளது.

Advertisement

‘தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல். தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல். அரசியல் அறிவியல், கணினி அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் அடிப்படையில், பாடங்கள் சார்ந்த காலிப்பணியிடங்களுக்கு 2,36,530 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் 1,73,410 ஆண்கள், 63,113 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் அடங்குவர். குறிப்பாக. மாற்றுத்திறனாளிகள் 3,734 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 856 தேர்வர்கள், தாங்கள் சொல்வதை எழுதுபவர்கள் (Scribe) உடன் தேர்வு எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 809 மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

* காலை 10 முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வு நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கு காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

* தேர்வறையில் அடையாளம் சரிபார்ப்பின்போது, தேர்வர்கள் ஆதார் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை கண்டிப்பாகக் காண்பிக்க வேண்டும்.

* தேர்வறைக்குள் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள், எலக்ட்ரானிக் கைக்கடிகாரம், கால்குலேட்டர், கையேடுகள் போன்றனவற்றுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

Advertisement