தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செனாப் நதி நீரை மொத்தமாக தடுக்க ரன்பீர் கால்வாயின் நீளத்தை அதிகரிக்க இந்தியா பரிசீலனை: பாகிஸ்தானுக்கு அடுத்த இடி

Advertisement

புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து செனாப் நதியில் ரன்பீர் கால்வாயின் நீளத்தை அதிகரிப்பதற்கு ஒன்றிய அரசு பரிசீலனை செய்து வருகின்றது. ஜம்முவின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான இந்தியாவின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும், எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கான ஆதரவை கைவிடும் வரையிலும் இந்த ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிந்து நதியில் இருந்து இந்தியா பெறும் நீர் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது செனாப் நதி நீரை இந்தியா பெரும்பாலும் பாசனத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றது. இனி எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தியா தனது தற்போதைய நீர்மின் திறனை 3000 மெகாவாட்டாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாககூறப்படுகின்றது. இதற்காக ரன்பீர் கால்வாயின் நீளத்தை 120கி.மீ. ஆக அதிகரிப்பதும் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். கதுவா, ரவி, பராக்வால் கால்வாய்களிலும் தூர்வாரும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement