தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தரையில் அமர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு...

பெஞ்சுகள் வாங்கிக் கொடுத்த பொறுப்புத் தலைமை ஆசிரியை!

Advertisement

விழுப்புரம் மாவட்டம், மரகதபுரம் ஊராட்சி ஒன்றிய ஓராசிரியர் தொடக்கப்பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியை அரசி, தனது பணி ஓய்வுக்கு முன்பாக, பள்ளி மாணவர்களின் நலனுக்காகத் தனது பேத்தியுடன் இணைந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பெஞ்சுகளை வாகிக் கொடுத்துள்ள செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘மரகதபுரம் ஊராட்சி ஒன்றிய ஓராசிரியர் தொடக்கப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக பொறுப்புத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். 2026ஆம் ஆண்டு மே மாதம் பணிஓய்வு பெற உள்ளேன். எனது நீண்டகாலப் பணி நிறைவடையும் தறுவாயில், பள்ளிக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. குறிப்பாக, மழைக்காலங்களில் பள்ளியின் சிமெண்ட் தரை அதிக ஈரப்பதத்துடன் காணப்படுவதால், தரையில் அமர்ந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதை நான் கவனித்துள்ளேன். இதற்குத் தீர்வு காணும் வகையில், மாணவர்களுக்கு இருக்கைகள் வாங்கித் தர வேண்டும் என முடிவுசெய்தேன். பள்ளி மாணவர்களுக்கு பெஞ்சுகள் வாங்கிக் கொடுப்பது பற்றி எனது பேத்தி சிவானியிடம் தெரிவித்தேன். எனது நோக்கத்தைப் புரிந்துகொண்ட பேத்தி சிவானி, தனது நண்பர்களுடன் இணைந்து ரூ.1 லட்சம் திரட்டிக் கொடுத்தார். எனது பங்காக ரூ.1 லட்சத்தைச் சேர்த்து மொத்தம் ரூ.2 லட்சம் செலவில் 60 மாணவர்கள் அமரக்கூடிய வகையில் 30 புதிய பெஞ்சுகளை வாங்கி பள்ளிக்கு வழங்கினோம்’’ என்று தெரிவித்தார்.

தலைமை ஆசிரியரின் இந்த சீரிய முயற்சியால், தற்போது அந்த அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வசதியான பெஞ்சுகளில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் கல்வி பயின்று வருகின்றனர். இதனால், மழைக்காலங்களில் உடல்நலக்குறைவு காரணமாக மாணவர்கள் விடுப்பு எடுப்பது குறைந்துள்ளதாகவும், அவர்கள் மகிழ்ச்சியாகப் பள்ளிக்கு வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 25 ஆண்டுகள் பணியாற்றிய பள்ளிக்கு, தனது ஓய்வுக்கு முன்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் மாணவர்களுக்கு அடிப்படைத்தேவையான பெஞ்சுகளை வாங்கிக் கொடுத்துச் செல்லும் தலைமை ஆசிரியை அரசி அவர்களின் சேவையையும், அவருக்கு உறுதுணையாக நின்ற அவரது பேத்தி சிவானியின் செயலையும் அப்பகுதி பொதுமக்களும், பெற்றோர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

- ஆனந்த்

Advertisement

Related News