தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுக்கு சமக்ர சிக்‌ஷா திட்ட நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியது பற்றி கேள்வி!!

சென்னை: தொழில்நுட்ப பணிகளுக்காக நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் எஸ்எஸ்ஏ நிதி நிறுத்தம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில்(நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) காலியாக உள்ள 1033 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. அதாவது தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவியியல், திறனறிவு மற்றும் மனக்கணக்கு தேர்வு(ஓம்ஆர் வடிவு) நடந்தது. இத்தேர்வை 48627 பேர் மட்டுமே எழுதினர். 43,882 பேர் எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அரசு பள்ளிகளில் இந்தி திணிப்பை தமிழ்நாடு நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது. இந்தி திணிப்பு, பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கு ஒப்புக்கொள்ளாததால் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கும் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2192 கோடியை ஒன்றிய அரசு வழங்காத நிலையில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் எஸ்எஸ்ஏ(சமக்ர சிக்ஷா திட்டம் ) நிதி நிறுத்தம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியின் விவரம் வருமாறு:-

கூற்று: அரசுப் பள்ளிகளில் இந்தித் திணிப்பை தமிழ்நாடு நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. மேலும் எழுச்சி பெறும் இந்தியாவிற்கான பிரதம மந்திரி பள்ளிகளில் இணைய மறுத்துவிட்டது. எனவே ஒன்றிய அரசு சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிதியை நிறுத்தி வைத்துள்ளது.

காரணம்: தமிழக அரசின் இரு மொழி கொள்கையையும் மற்றும் தேசிய அளவில் சரியாக அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் மத்திய அரசு அங்கீகரித்தாலும், 2020 ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையின் மூலம் அது பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள துறைகளில் தனது பங்களிப்பை வழங்க விரும்புகிறது. இது தமிழக அரசால் கூட்டாட்சி நிர்வாக முறை என்ற கருத்திற்கு எதிரானதாகக் கருதப்பட்டு கடுமையாக எதிர்க்கப்படுகிறது.

(A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

(B) கூற்றும் காரணமும் சரி, ஆயினும் காரணமே கூற்றிற்கான சரியான விளக்கம்

(C) கூற்று தவறு, காரணம் சரி

(D) கூற்றும் காரணமும் சரி ஆயினும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

(E) விடை தெரியவில்லை என்ற கேள்வி இடம் பெற்று இருந்தது

Related News