தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுடன் சென்னை போலீஸ் அதிகாரிகள் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக பதவியேற்றுள்ள வெங்கட்ராமனை நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு உயர் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் நேற்று சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்களுடன் நேரில் சென்று புதிய டிஜிபி வெங்கட்ராமனை சந்தித்தார்.

Advertisement

அப்போது கமிஷனர் அருண் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பிறகு பெருநகர காவல்துறையில் பணியாற்றும் கூடுதல் கமிஷனர்களான கண்ணன், பிரவேஷ்குமார், கார்த்திகேயன், ராதிகா மற்றும் இணை கமிஷனர்களான விஜயகுமார், மனோகர், பண்டி கங்காதர், தீஷா மிட்டல், சோனல் சந்திரா ஆகியோரை டிஜிபியிடம் கமிஷனர் அருண் தனித்தனியாக அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த சந்திப்பின் போது, சென்னை பெருநகர காவல் துறையில் சட்டம் -ஒழுங்கு மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக டிஜிபி கமிஷனர் அருணுடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement

Related News