தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிராம ஊராட்சிகளில் அனுமதி இல்லாத கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும்: அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் அளித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Advertisement

இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பொன்னையா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் ஒன்றினை உருவாக்கி, அதில் கட்டிட அனுமதியை மூன்று வகைகளில் வழங்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சுயசான்றின் அடிப்படையில், 2500 சதுர அடியிலிருந்து மனையில், 3000 சதுர அடி வரையிலான பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டுமானங்களைக் கட்டிக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

கட்டிடத்தின் பரப்பளவு 10,000 சதுர அடிக்கு கீழ் உள்ள பட்சத்தில் அதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம், இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இக்கட்டிட வரைபடங்களின் ஆவணங்கள் உரிய அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கட்டிட வரைபட அனுமதி இணைய தளம் மூலம் வழங்கப்படுகிறது. 10,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு, தொழில்நுட்ப அனுமதி நகர் மற்றும் ஊரமைப்பு துறை மூலம் பெறப்பட்டு, இறுதி ஒப்புதல் கிராம ஊராட்சியின் நிர்வாக அலுவலரால் வழங்கப்படுகிறது. இவ்வாறு கட்டிட வரைபட அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடங்கள் என்றும், கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் என்றும் வரையறை செய்யப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களின் கட்டுமானத்தை நிறுத்த, நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

அவை :

Advertisement

Related News