தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவேற்காட்டில் கொசு உற்பத்திக்கு காரணமான கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

பூந்தமல்லி: திருவேற்காட்டில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு நேற்று நகராட்சி சுகாதார குழுவினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். இதைத் தொடர்ந்து, நகராட்சி பகுதிகளில் திடக்கழிவுகள் கொட்டுபவர்கள், கழிவுநீரை திறந்து விடுபவர்கள் மற்றும் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவேற்காடு பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement

இதற்கிடையே நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் பகுதியில் கடந்த 10 நாட்களில் பலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாக சுகாதார குழுவினருக்கு தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் சுகாதார குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் கொசுமருந்து தெளிப்பது, புகை அடித்தல், கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் ஆதாரங்களை அழித்தல் உள்பட பல்வேறு தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அயனம்பாக்கம் பகுதியில் நகராட்சி ஆணையர் கணேசன் அறிவுறுத்தலின்பேரில், நேற்று மாலை நகராட்சி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் சுகாதார குழுவினர் கள ஆய்வு நடத்தினர். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் நடக்கும் இடத்தில் டயர், பீப்பாய், டிரம் உள்பட பல்வேறு பொருட்களில் தேங்கியிருந்த நீரில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பெரிய கோலடி பகுதியில் தனியார் நிறுவன வாகனத்தில் திடக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவதை, சுகாதார குழுவினரின் ரோந்து பணியின்போது தடுத்து நிறுத்தினர். மேலும், அந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குப்பை கொட்டிய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருவேற்காடு பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானவர்கள் மீதும், திடக்கழிவு கொட்டுபவர்கள் மீதும், கண்ட இடங்களில் தனியார் லாரிகள் மூலம் கழிவுநீரை திறந்து விடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement

Related News