தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூர் அருகே நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழுவினர் ஆய்வு..!!

திருவாரூர்: திருவாரூர் அருகே நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்த மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1அரை லட்ச ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குருவை நெற்பயிர்கள் சுமார் 83 சதவீதம் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்த நிலையில், விலை நிலங்களில் மீதமுள்ள நெற்பயிர்களை அறுக்க முடியாமல் உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 21 சதவீதம் மழை ஈரப்பதம் உள்ளதால் ஈரப்பதம் குறைந்தபட்சம் 17 மட்டுமே எடுக்க முடிகிறது. 21 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தற்போது ஒன்றிய குழு சார்பில் தானிய சேமிப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் பி.கே சிங் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

முதலாவதாக கோவில்வெண்ணி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து ஊர்குடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள விவசாயிகளிடம் நெல் ஈரப்பதம் குறித்தும், நெல் மூட்டைகளை நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஈரப்பத மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்து வருகின்றனர். இந்த ஆய்வில் விவசாயிகள் அதிகாரிகளிடம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் இயந்திரங்களை அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இரண்டு பருவமழைகளால் பாதிக்கப்படுவது தமிழகம் மட்டுமே. எனவே தமிழகத்தில் தகுந்தாற்போல் தனி கொள்முதல் கொள்கை அனுமதிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement