தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காந்தாரியில் 50,000 நெல் மூட்டைகள் தேக்கம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காந்தாரி கிராமத்தில் 50,000 நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் அவற்றை கொள்முதல் செய்து கிட்டங்கிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிர ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, உள்ளிட்ட பகுதியில் குருவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 382 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மன்னார்குடி அருகே காந்தாரி கிராமத்தில் சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை தினம் என்பதால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யப்படாமல் இருந்த வண்ணம் சுமார் 50,000 நெல் மூட்டைகள் அங்கு தேக்கம் அடைந்திருக்கிறது. சாலையின் இருபுறங்களிலும் நெல்மணிகளை கொட்டி வைத்து காய வைத்து விவசாயிகள் வருகிறார்கள். இந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்தால் மட்டுமே அவர்களுடைய செலவு தொகையை எடுக்க முடியும். உடனடியாக நெல்மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News