தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தெலங்கானா பக்தர் குத்திக்கொலை: 2 வாலிபர்கள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தெலங்கானா பக்தர் சரமாரி குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் யாதகிரி மாவட்டம் சவுண்டாரிபுரத்தை சேர்ந்தவர் வித்யாசாகர் (32). இவர் கடந்த 7ம் தேதி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். மறுநாள் (8ம் தேதி) இரவு அண்ணாமலையார் கோயிலில் இருந்து கிரிவலம் புறப்பட்டார். கிரிவல பாதையில் மாநகராட்சி மருத்துவமனை அருகே ஒரே பைக்கில் வந்த 2 வாலிபர்கள், வித்யாசாகர் மீது மோதியுள்ளனர்.
Advertisement

இதை அவர் தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் கத்தியால், வித்யாசாகரின் கழுத்தில் சரமாரி குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வித்யாசாகர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தகவலறிந்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சென்று வித்யாசாகரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்றுமுன்தினம் வித்யாசாகர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருவண்ணாமலையை சேர்ந்த குகனேஸ்வரன் (22), தமிழரசன் (25) ஆகியோர் வித்யாசாகரை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். எதிர்பாராமல் நடந்த விபத்தின்போது ஏற்பட்ட தகராறில் வித்யாசாகர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வழிப்பறி முயற்சியில் கொலை செய்யப்பட்டாரா என அவர்களிடம் விசாரணை நடக்கிறது. கிரிவலம் வந்த பக்தர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அரசு மருத்துவமனையில் டிரைவர் குத்திக்கொலை

திருப்பூர், குமாரனந்தபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (32), பிரியா (28) தம்பதியின் மகளான பவதாரணியை(6), நேற்று முன்தினம் இரவு வீட்டருகே விளையாடியபோது தெரு நாய் கடித்தது. உடனடியாக திருப்பூர் அரசு மருத்துமனயைில் சேர்த்தனர். தகவல் அறிந்து பிரியாவின் அண்ணன் கருப்பசாமி (31), கார்த்திகேயனின் அக்காள் கணவர் குலசிவேலு (51) ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது கருப்பசாமி, தங்கை கணவரிடம் தனியார் மருத்துவமனையில் ஏன் சேர்க்கவில்லை என்று கேட்டு தகராறு செய்தார். அதற்கு குலசிவேலு ‘‘அரசு மருத்துவமனையில் தான் நாய்கடிக்கு தரமான மருந்து, மாத்திரைகள் இருக்கும்’’ என்றார். இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த குலசிவேலு கத்தியால் கருப்புசாமி கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த கருப்பசாமி அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து குலசிவேலுவை கைது செய்தனர்.

Advertisement

Related News